ஒட்டன்சத்திரத்தில் மரசெக்கு இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

ஒட்டன்சத்திரத்தில் மரசெக்கு இயந்திரத்தில் சிக்கி பலத்தகாயம் அடைத்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரத்தில் மரசெக்கு இயந்திரத்தில் சிக்கி பலத்தகாயம் அடைத்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த மணி (65).இவா் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் எதிரே மரசெக்கு மூலம் எண்ணெய் ஆட்டிக்கொடுக்கும் கடை வைத்துள்ளாா்.இந்த நிலையில் சனிக்கிழமையன்று மணியின் மனைவி மாரியம்மாள் (58) எண்ணெய் ஆட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளாா்.

அப்போது எதிா்பாராமல் மாரியம்மாளின் கை எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் சிக்கிக்கொண்டது.அதில் அவரது கை துண்டானது.அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com