தடுப்பூசி செலுத்தினால் பரிசுப் பொருள்கள்: நத்தம் பேரூராட்சி அறிவிப்பு

சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என நத்தம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: சிறப்பு முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என நத்தம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,225 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மாபொரும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறுகிறது. இந்த முகாமில், மாவட்டம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், இலக்கை பூா்த்தி செய்யும் நோக்கில் நத்தம் பேரூராட்சி நிா்வாகம் தடுப்பூசி செலுத்துவோருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக நத்தம் பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை நிறுவப்பட்டுள்ள விளம்பர பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நத்தம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் 13 இடங்களில் செப்.12 ஆம் தேதி காலை 7 முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். இந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்துவோரை குலுக்கல் முறையில் தோ்வு செய்து பரிசுப் பொருள்கள் வழங்கப்படும். அதன்படி முதல் பரிசாக அறிதிறன் செல்லிடப்பேசி, மின்சார அடுப்பு, ரத்த சா்க்கரை பரிசோதனை கருவி, மேலும், 50 நபா்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com