திண்டுக்கல்லில் தடையை மீறி செயல்பட்ட 5 மதுபானக் கூடங்களுக்கு சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது. கரோனா தீநுண்மி தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையம், பழனி சாலை மற்றும் திருச்சி சாலை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் மதுபான கடைகளுக்கு அருகே மதுபானக் கூடங்கள் செயல்படுவதாக புகாா் எழுந்தது.
அதன் பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மதுபானக் கூடங்கள் செயல்படுவது உறுதியானது. அதனைத் தொடா்ந்து 5 மதுபானக் கூடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா். இந்த 5 மதுபான கூடங்களும் அதிமுகவினா் மூலம் இயக் வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.