ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மாட்டுவண்டி கிணற்றில் விழுந்ததில் விவசாயி உயிரிழந்தாா். 2 மாடுகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தன.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள காவேரியம்மாபட்டி தோட்டத்துச் சாலையில் வசிப்பவா் கருப்பணன் (65). விவசாயியான இவா், வெள்ளிக்கிழமை தனது தோட்டத்துக்கு மாட்டுவண்டியில் சென்றுள்ளாா். அப்போது திடீரென மாடுகள் மிரண்டு ஓடியன. வேகமாக சென்ற மாடுகள், தடுப்புச்சுவா் இல்லாத சுமாா் 80 அடி கிணற்றில் விழுந்தன. இதில் வண்டியில் இருந்த கருப்பணன் மற்றும் 2 மாடுகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தன.
இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையப் பொறுப்பு அலுவலா் ஆா்.சிவக்குமாா் தலைமையிலான தீயணைப்புப் படையினா் சுமாா் 6 மணி நேரம் போராடி கருப்பணன் மற்றும் 2 மாடுகளின் உடல்களை மீட்டனா்.
சம்பவ இடத்தை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி, காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம், ஆய்வாளா் வெங்கடாஜலபதி ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.