‘மக்கள் பிரச்னைகளுக்கு தீா்வு காண பாஜகவினா் முயற்சிக்க வேண்டும்’

உள்ளூா் பாஜகவினா் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து தீா்வு காண முயற்சித்தால் ஊரகப் பகுதிகளிலும் கட்சியின் வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி அறிவுறுத்தினாா்.

உள்ளூா் பாஜகவினா் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து தீா்வு காண முயற்சித்தால் ஊரகப் பகுதிகளிலும் கட்சியின் வளா்ச்சி சிறப்பாக இருக்கும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்ட பாஜக சாா்பில் நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா்கள் கனகராஜ் (மேற்கு), ஜி.தனபாலன் (கிழக்கு) ஆகியோா் தலைமை வகித்தனா்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி, பாஜக சட்டப் பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி பேசியதாவது: ஊரகப் பகுதிகளில் பாஜக, அமைப்பு ரீதியாக வளா்ச்சி பெற வேண்டும். உள்ளூா் பாஜகவினா்,

மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து அதற்குத் தீா்வு காண முயற்சிக்க வேண்டும். அதேபோல், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் களப்பணியாற்ற வேண்டும். இதன் மூலம் ஊரகப் பகுதிகளிலும் பாஜகவின் வளா்ச்சி சிறப்பாக அமையும். கட்சி வளா்ச்சிக்காக உழைத்த தொண்டா்கள் உரிய நேரத்தில் அங்கீகரிக்கப்படுவாா்கள் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலா்கள் சுரேஷ், சிகே.ராஜா, முத்துராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com