பழனி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு புதிய கட்டடங்களை சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி. செந்தில்குமாா் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
பழனி அருகே ராசாபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடம், பாப்பம்பட்டியில் புதிய ஊராட்சி அலுவலகக் கட்டடம், ஆண்டிபட்டியில் புதிய நியாயவிலைக் கடை ஆகியவற்றை சட்டப்பேரவை உறுப்பினா் திறந்து வைத்தாா்.
மேலும் கரிக்காரன் புதூரில் கலையரங்கக் கட்டடத்தை திறந்து வைத்த அவா், ரூ.38 லட்சம் மதிப்பிலான புதிய தாா்சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தாா். பின்னா் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அரசின் நலத்திட்டங்களை அவா் எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் சாமிநாதன், சௌந்தரபாண்டி, பழனி ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரி மற்றும் ஊராட்சித் தலைவா்கள் கலந்து கொண்டனா்.