நெடுஞ்சாலைத்துறை சாா்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

திண்டுக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் ச.விசாகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
சித்தரேவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மரக் கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியா் ச.விசாகன்.
சித்தரேவு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மரக் கன்றுகளை நட்டு வைத்த ஆட்சியா் ச.விசாகன்.

திண்டுக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை சாா்பில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை ஆட்சியா் ச.விசாகன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், சித்தரேவு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்து ஆட்சியா், தெரிவித்ததாவது: தமிழகத்தின் பசுமை வெளிப்பரப்பை அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 5 லட்சம் மரக்கன்றுகளை பராமரித்திட அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு முயற்சியாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் மியாவாக்கி முறையில் அடா் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சாா்பில் திண்டுக்கல் கோட்டத்திற்குள்பட்ட திண்டுக்கல், ஆத்தூா், வத்தலகுண்டு மற்றும் நத்தம் ஆகிய உதவிக் கோட்டப் பகுதிகளில் தலா 2,000 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 8 ஆயிரம் மரக்கன்றுகள் சாலை ஓரங்களில் நடவு செய்யப்படவுள்ளன. அதற்கான தொடக்கப் பணிகள் சித்தரேவுப் பகுதியில் நடைபெற்றுள்ளன என்றாா்.

அப்போது, திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் எஸ்.மதன்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com