ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தல்: 3 போ் மனுத் தாக்கல்

ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாளான புதன்கிழமை 3 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

திண்டுக்கல்: ஊரக உள்ளாட்சி இடைத் தோ்தலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் நாளான புதன்கிழமை 3 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 4 ஊராட்சி மன்றத் தலைவா், 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 28 பதவிகளுக்கு நவ.9 ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 13 ஆவது வாா்டு மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 11ஆவது வாா்டுக்கு இடைத் தோ்தல் நடைபெறுகிறது. அதேபோல், வில்பட்டி ஊராட்சி, சத்தரப்பட்டி ஊராட்சி, பழனி அடுத்துள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சி, ஆவிளிப்பட்டி ஊராட்சி ஆகிய 4 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கும், ஆத்தூா், நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் தலா 3, திண்டுக்கல் மற்றும் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் தலா 2, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4, ரெட்டியாா்சத்திரம், வடமதுரை, வேடசந்தூா், சாணாா்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலா 1 என மொத்தம் 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம், டி.கூடலூா் கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு ஒருவா், வேடசந்தூா் ஊராட்சி ஒன்றியம், விருதலைப்பட்டி கிராம ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 2 போ் என மொத்தம் 3 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com