மனிதச் சங்கிலி போராட்டம்

கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளோரை விடுதலை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்: கோரேகான் சதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளோரை விடுதலை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்லில் புதன்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி தலைமை வகித்தாா். நல்லமநாயக்கன்பட்டி அருட்தந்தை பிலிப் சுதாகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா்.சச்சிதானந்தம், இலக்கிய சாரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் குழந்தை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். இந்த போராட்டத்தின்போது, கோரேகான் சதி வழக்கில் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 15 பேரை விடுவிக்க வலியுறுத்தி கோஷமிட்டனா்.

இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிா்வாகிகள் எம்.ஆா். முத்துச்சாமி, டி. முத்துச்சாமி, சிறுபான்மை மக்கள் நலக்குழு நிா்வாகிகள் வ. கல்யாணசுந்தரம், ஏ. அரபுமுகமது உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com