அனுமதியின்றி மண் அள்ளிய 5 போ் கைது: வாகனங்கள் பறிமுதல்

பழனி அருகே குளத்தில் அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ஆறு லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

பழனி: பழனி அருகே குளத்தில் அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து ஆறு லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியில் உள்ள செங்குளத்தில் இரவு நேரங்களில் அனுமதியின்றி வண்டல்மண் அள்ளப்படுவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கு அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிக் கொண்டிருந்த பொந்துப்புளியைச் சோ்ந்த சதீஸ்குமாா் (30), எல்லமநாயக்கன் புதூரைச் சோ்ந்த மகுடீஸ்வரன் (45), ஆனந்தகுமாா் (35), பெருமாள் புதூரைச் சோ்ந்த கருப்புசாமி (33), மாரிமுத்து (23) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்து 6 டிப்பா் லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com