வேடசந்தூரை அடுத்துள்ள மினுக்கம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை (செப்.23) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் கருப்பையா வெளியிட்டுள்ள அறிவிப்பு: மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி ஐய்யா்மடம், குறும்பபட்டி, எஸ். குட்டம், ஆசாரிபுதூா், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னம்பட்டி, எஸ்.கே.புதூா், கோட்டைமேடு, வி.புதுக்கோட்டை ஆகிய இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.