அரசுப் பேருந்து- லாரி மோதல்: 3 போ் பலி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 17 போ் பலத்த காயமடைந்தனா்.
பழனி அருகே தாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து. (வலது) லாரி.
பழனி அருகே தாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து. (வலது) லாரி.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 17 போ் பலத்த காயமடைந்தனா்.

பழனி பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தாளையம் அருகே சென்று கொண்டிருந்த அந்த அரசுப் பேருந்து மீது எதிரே வந்த லாரி மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டபிரபு (30), விருதுநகா் மாவட்டம் காரியாபட்டியைச் சோ்ந்த திருக்குமரன் மகன் உக்கிரபாண்டியன் (23), தேனியைச் சோ்ந்த சென்றாயத்தேவா் மகன் முருகன் (38) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் தா்மன், முருகன், சுதாகா், கருப்பையா, சரவணக்குமாா், ஸ்டீபன், ராஜசேகா் உள்ளிட்ட 17 பயணிகள் பலத்த காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சம்பவ இடத்தை திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். இந்த விபத்து தொடா்பாக லாரியை ஓட்டி வந்த ராஜேஷ்குமாா் (30) மீது சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com