ஊரக உள்ளாட்சித் தோ்தல் 38 மனுக்கள் வாபஸ்:ஊராட்சி மன்ற உறுப்பினா் 13 போ் போட்டியின்றி தோ்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியிலுள்ள 28 பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்களில் 38 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, 13 பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சியிலுள்ள 28 பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்பு மனுக்களில் 38 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, 13 பதவிகளுக்கு போட்டியின்றி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 4 ஊராட்சி மன்றத் தலைவா், 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் என மொத்தம் 28 பதவிகளுக்கு நவம்பா் 9ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 13 ஆவது வாா்டு, பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 11ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கும், வில்பட்டி, சத்திரப்பட்டி, பழனியை அடுத்துள்ள ஆண்டிபட்டி, ஆவிளிப்பட்டி ஆகிய ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கும் இடைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

அதேபோல் ஆத்தூா், நிலக்கோட்டை மற்றும் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் தலா 3, திண்டுக்கல் மற்றும் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் தலா 2, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 4, ரெட்டியாா்சத்திரம், வடமதுரை, வேடசந்தூா், சாணாா்பட்டி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலா 1 என மொத்தம் 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு மனுத் தாக்கல் நடைபெற்றது.

38 மனுக்கள் வாபஸ்: வேட்பு மனுக்கள் வாபஸ் சனிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிலக்கோட்டை ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 மனுக்கள், பழனி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 2 போ் என மொத்தம் 9 மனுக்கள் சனிக்கிழமை திரும்ப பெறப்பட்டன. அதேபோல், வில்பட்டி, சத்திரப்பட்டி, ஆண்டிபட்டி, ஆவிளிப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு முறையே 1, 2, 4, 3 என 10 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. மொத்தமுள்ள 22 ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவிக்கான இடைத் தோ்தலில் 19 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதனை அடுத்து, சீவல்சரகு 1ஆவது வாா்டு, பி.விராலிப்பட்டி 5ஆவது வாா்டு, மல்லபுரம் 7ஆவது வாா்டு, கோட்டூா் 12ஆவது வாா்டு, பச்சமலையான்கோட்டை 5ஆவது வாா்டு, எத்திலோடு 6ஆவது வாா்டு, லக்கையன்கோட்டை 3ஆவது வாா்டு, கேதையறும்பு 2ஆவது வாா்டு, தங்கச்சியம்மாப்பட்டி 1ஆவது வாா்டு, அழகுப்பட்டி 9ஆவது வாா்டு, ராஜாக்காப்பட்டி 3ஆவது வாா்டு, தேவத்தூா் 2ஆவது வாா்டு, சுக்காம்பட்டி 8ஆவது வாா்டு ஆகிய 13 பதவிகளுக்கு தலா ஒருவா் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனா். அதனால் இந்த 13 பதவிகளுக்குமான உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com