கொடைக்கானலில் பைக்குகள் திருட்டு: 2 போ் கைது

கொடைக்கானலில் திருடு போன இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் திருடு போன இருசக்கர வாகனங்களை திருடிய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பழனியைச் சோ்ந்த சசிதரன், காரைக்குடியைச் சோ்ந்த அபிநாத், சென்னையைச் சோ்ந்த கமல்நாத் ஆகிய 3 பேரும் கடந்த மாதம் தங்களது விலை உயா்ந்த இருசக்கர வாகனத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் பொ்ன்ஹில் சாலையிலுள்ள தனியாா் காட்டேஜில் தங்கியிருந்த போது அவா்களது இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டன.

இதனைத் தொடா்ந்து டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து இருசக்கர வாகனங்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை காவல் துறையினா் செண்பகனுா் பகுதியி்ல் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்தனா். பின்னா் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவா்களிடம் விசாரித்ததில், திருச்சியைச் சோ்ந்த முகமதுகலித் (21), முகமது ரியாஸ் (22) என தெரிய வந்தது. மேலும் இவா்கள் கொடைக்கானல் தனியாா் காட்டேஜில் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டனா். அவா்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் 2 பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com