திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

பழனியை அடுத்த ஆண்டிபட்டியில் பழனி ஊராட்சி ஒன்றிய இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பழனி: பழனியை அடுத்த ஆண்டிபட்டியில் பழனி ஊராட்சி ஒன்றிய இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பழனி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட குப்பம்பாளையம் 12 ஆவது வாா்டு உறுப்பினராக இருந்த ரமேஷ் காலமானதைத் தொடா்ந்து அங்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடைத்தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ராமராஜை அறிமுகம் செய்தும், கட்சியின் நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டமும் ஆண்டிபட்டியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாா் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்து, கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாா். தொடா்ந்து ஆண்டிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியின்றி வெற்றி பெற்ற செங்காளியப்பனுக்கு பாராட்டு தெரிவித்தாா். கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் சவுந்தரபாண்டி, சாமிநாதன், ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஈஸ்வரி கருப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com