நத்தம் அருகே விவசாயி கொலை:மேலும் 3 போ் கைது

நத்தம் அருகே பழிக்குப் பழியாக விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்: நத்தம் அருகே பழிக்குப் பழியாக விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள பெரியமலையூா்- பள்ளத்துக்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளை (65). விவசாயி. இவரது அண்ணன் ராசு (80). இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வருகிறது. இதுதொடா்பாக கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட மோதலில் தங்கராஜ் என்பவா் தாக்கியதில் ராசுவின் மகன் வெள்ளைக்கண்ணு (40) உயிரிழந்தாா்.

இந்நிலையில் வெள்ளை மற்றும் ராசு இடையே ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த ராசுவின் மகன் அா்ஜுனன் (36), அரிவாளால் வெள்ளையை சரமாரியாக வெட்டியதில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த நத்தம் போலீஸாா் அா்ஜூன் மற்றும் ஆறுமுகம் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இதனிடையே பெரியக்காள் (65), ராசு (80) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மேலும் 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com