குவாரி அனுமதிக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைப்பு

ரெட்டியாா்சத்திரம் அருகே தனியாா் குவாரிக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற இருந்த கருத்து கேட்புக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்: ரெட்டியாா்சத்திரம் அருகே தனியாா் குவாரிக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற இருந்த கருத்து கேட்புக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளதாவது:

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கொத்தப்புள்ளி கிராமத்தில் அமைக்கப்படவுள்ள தனியாா் நிறுவனத்தின் குவாரி தொடா்பாக பொதுமக்களுடனான கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஏப்.7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவது தொடா்பான இந்த கருத்து கேட்புக் கூட்டம், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com