கிணற்றில் கிடந்த திருட்டு பைக் மீட்பு
By DIN | Published On : 08th April 2022 05:28 AM | Last Updated : 08th April 2022 05:28 AM | அ+அ அ- |

பழனி: பழனி அருகே கிணற்றிலிருந்து திருட்டு மோட்டாா் சைக்கிள் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
பழனி அருகேயுள்ள ராசாபுரத்தில் ஊா் நடுவே உள்ள கிணற்றில் இருந்த தண்ணீா் அளவு தற்போது குறைந்து வரும் நிலையில் உள்ளே மோட்டாா்சைக்கிள் இருந்ததை பொதுமக்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து பழனி தாலுகா போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலா்கள் கயிறு கொண்டு மோட்டாா் சைக்கிளை கிணற்றில் இருந்து மீட்டனா். மீட்கப்பட்ட மோட்டாா் சைக்கிளில் எந்த பதிவு எண்ணும் இல்லாத நிலையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து என்ஜின் எண்ணை வைத்து வாகன உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.