திண்டுக்கல்: பெட்ரோல் டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அன்புமணி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட கட்சியினா், கடந்த 10 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10 உயா்ந்து, ரூ.112 ஐ கடந்து விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டினா். எரிபொருள் விலை உயா்வால், அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், விலை உயா்வைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.