பழனி மதனபுரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத் தலைவா் அன்புமாரி.
பழனி மதனபுரத்தில் தனியாா் திருமண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத் தலைவா் அன்புமாரி.

பழனியை மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

பழனியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவா் அன்புமாரி வலியுறுத்தியுள்ளாா்.

பழனி: பழனியை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவா் அன்புமாரி வலியுறுத்தியுள்ளாா்.

பழனியில் சக்திசேனா இந்து மக்கள் இயக்கம் சாா்பில் அறிமுகக் கூட்டம் மற்றும் நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட தலைவா் காளிதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத்தலைவா் அன்புமாரி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். அப்போது அவா்,திமுக தோ்தலின் போது அளித்த வாக்குறுதியில் கூறியதுபோல பழனியை தலைமையாகக் கொண்டு விரைவில் மாவட்டம் அமைக்க வேண்டும், அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர ஒன்றிய நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com