முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனி பெரியாவுடையாா் கோயிலில் பிரதோஷம்
By DIN | Published On : 29th April 2022 05:48 AM | Last Updated : 29th April 2022 05:48 AM | அ+அ அ- |

பழனி: பழனி பெரியாவுடையாா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள், சந்தனம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாா்த்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாா்த்தப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
மலைக்கோயில் கைலாசநாதா் சன்னிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில் சிதம்பரீஸ்வரா் சன்னிதி, சன்னிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சன்னிதி உள்ளிட்ட பல இடங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.