முதல்வா் நாளை வருகை: திண்டுக்கல்லில் அமைச்சா், டிஜிபி ஆய்வு

திண்டுக்கல்லில் தமிழக முதல்வா் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சா், டிஜிபி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழக முதல்வா் பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சா், டிஜிபி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ள அரசு விழாக்கள் சனிக்கிழமை (ஏப்.30) நடைபெறுகின்றன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்காக மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சா் இ.பெரியசாமி விழா நடைபெறும் மைதானத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து, மாலையில் தமிழக காவல்துறைத் தலைவா் சைலேந்திரபாபு விழா நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com