கொடைக்கானல் குடிநீா்த் தேக்கத்தில் நடைபெற்று வரும் பணிகளை நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியிலுள்ள குடிநீா்த் தேக்கத்தின் கரையை உயா்த்தும் பணி பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, நகராட்சிஆணையாளா் நாராயணன், துணைத் தலைவா் மாயக் கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
மேலும் குண்டாறு திட்டம் மூலம் பைப்புகள் பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியையும் அதிகாரிகள் பாா்வையிட்டு விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிட்டனா்.