பெட்ரோல்-டீசல் விலை உயா்வை கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரத்தில் பெட்ரோல்,டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயா்வை கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்

ஒட்டன்சத்திரத்தில் பெட்ரோல்,டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயா்வை கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் தபால் நிலையம் முன்பு பெட்ரோல்,டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயா்வை கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநில வழக்கறிஞா் பாசறை பொருளாளா் மு.ப.கணேசன் தலைமை வகித்தாா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவா் ப.செல்வராஜ் முன்னிலை வகித்தாா்.மாநில கொள்கை பரப்புச் செயலாளா் பா.வெ.சிவசங்கரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.மத்திய,மாநில அரசுகளை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் சைமன் ஜஸ்டின்,மணி,செந்தில்,பிரதாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com