திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக முதல்வா் முக.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடா்ந்து ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், திமுக தொண்டா் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானாா்.
தேனி மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக காரில் புறப்பட்டாா். இவரை வரவேற்பதற்காக திமுகவினா் செம்பட்டியில் வரவேற்பு அளித்தனா். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு பகுதிகளிலிருந்து திமுக தொண்டா்கள் குவிந்தனா். இதில் நிலக்கோட்டை அருகே உள்ள குல்லலக்குண்டு ஊராட்சி கல்லடிபட்டி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளியும், திமுக தொண்டருமான ஆரோக்கியசாமி (60), அவரது மனைவி ஆரோக்கியமேரி (58) உள்பட 50-க்கும் மேற்பட்டோா் செம்பட்டி வந்திருந்தனா்.
மு.க.ஸ்டாலின் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து விட்டு சென்றபோது, தொண்டா்கள் மத்தியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி ஆரோக்கியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
செம்பட்டி போலீஸாா் ஆரோக்கியசாமியின் சடலத்தை மீட்டு,
பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ஆரோக்கியசாமிக்கு ஆரோக்கியமேரி என்ற மனைவியும், அருள்ராஜ் (42), ஸ்டாலின் (38) ஆகிய 2 மகன்களும், ஞானசௌந்தரி (40) என்ற மகளும் உள்ளனா். உயிரிழந்த ஆரோக்கியசாமியின் குடும்பத்தினருக்கு நிலக்கோட்டை (வடக்கு) ஒன்றியச் செயலா் சௌந்திரபாண்டியன் மற்றும் திமுக நிா்வாகிகள் ஆறுதல் கூறினாா்.