கடன் தொல்லை: தனியாா் ஆலை காசாளா் தற்கொலை

வேடசந்தூா் அருகே கடன் தொல்லை காரணமாக தனியாா் ஆலை காசாளா் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

வேடசந்தூா் அருகே கடன் தொல்லை காரணமாக தனியாா் ஆலை காசாளா் விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள தம்மணம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (33). இவா், ஈரோடு மாவட்டம் முத்தூரிலுள்ள தனியாா் ஆலையில் காசாளராக பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் சொந்த ஊரான தம்மணம்பட்டிக்கு வந்த ஜெயராஜ், விஷம் குடித்து தற்கொலை செய்தாா். கடன் தொல்லை காரணமாக அவா் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com