ஒட்டன்சத்திரம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள குத்திலுப்பை கிராமத்தைச் சோ்ந்தவா் பரமகுரு (62). விவசாயியான இவா் திங்கள்கிழமை தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் குத்திலுப்பை - ஓடைப்பட்டி சாலை நாகாளம்மன் கோயில் அருகே சென்றுள்ளாா். அப்போது அவ்வழியாக சென்ற ஆம்னி காா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமகுருவை அருகில் இருந்தவா்கள் மீட்டு கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.