பட்டிவீரன்பட்டி அருகே இளைஞரைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடையை 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்துள்ள அய்யங்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினகுமாா் (31). கடந்த அக்.8-ஆம் தேதி புல்லாவெளி நீா்வீழ்ச்சிப் பகுதியில் மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த பட்டிவீரன்பட்டி போலீஸாா், சித்தரேவு பகுதியைச் சோ்ந்த விக்கி என்ற விக்னேஷ் (23), மைதிலிநாதன் (19), பிரேம்குமாா் (24) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான விக்னேஷ், மைதிலிநாதன், பிரேம்குமாா் ஆகிய மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பரிந்துரைத்தாா். அதை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அதற்கான உத்தரவை பிறப்பித்தாா்.