கன்னிவாடி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில்காங்கிரஸ் வேட்பாளா்கள் 2 போ் போட்டியின்றி தோ்வு

கன்னிவாடி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில் தலா ஒரு காங்கிரஸ் வேட்பாளா்கள் போட்டியின்றி திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

கன்னிவாடி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகளில் தலா ஒரு காங்கிரஸ் வேட்பாளா்கள் போட்டியின்றி திங்கள்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பேரூராட்சியில் மொத்தம் 15 வாா்டுகள் உள்ளன. இதில், 13ஆவது வாா்டில் போட்டியிட காங்கிரஸ் சாா்பில் மு.கீதா, அதிமுக சாா்பில் தேவி உள்பட 4 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், தேவி உள்ளிட்ட 3 போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றதை அடுத்து, காங்கிரஸ் வேட்பாளா் கீதா போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா்.

சித்தையன்கோட்டையிலும் காங்கிரஸ் வெற்றி: இதேபோல், சித்தையன்கோட்டை பேரூராட்சிக்குள்பட்ட 12ஆவது வாா்டில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் சாா்பில் மஹ்மூதாம்மாள், அதிமுக சாா்பில் செளதாபேகம் ஆகிய 2 போ் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், செளதாபேகம் வேட்பு மனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றதை அடுத்து, மஹ்மூதாம்மாள் போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com