விபத்தில் காயமடைந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த ஆட்சியா்

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மீட்டு ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தனது காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

ராமநாதபுரத்தில் திங்கள்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மீட்டு ஆட்சியா் சங்கா்லால்குமாவத் தனது காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சங்கா்லால்குமாவத் முகாம் அலுவலகத்திலிருந்து காரில் சேதுபதி நகரில் உள்ள அலுவலகத்துக்கு புறப்பட்டாா். பாரதி நகரில் அவரது காா் சென்ற போது சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து காயமடைந்த சதீஷ் (30) என்பவரை சாலையோரம் படுக்க வைத்திருந்தனா்.

ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தும் தாமதமான நிலையில், ஆட்சியா் தனது காரில் இளைஞரை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தாா். அங்கு அவரைச் சிகிச்சைக்கு சோ்த்துவிட்டு மீண்டும் அலுவலகம் புறப்பட்டாா்.

அங்கு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com