திண்டுக்கல் மாவட்டத்தில் குடியரசு தினவிழா

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

கொடைக்கானல் நகராட்சி வளாகத்தில் நகராட்சி ஆணையாளா் நாராயணன் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். முன்னதாக கொடைக்கானல் சிறுவா் பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கும், பிரையண்ட் பூங்கா அருகே உள்ள நேரு சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், டிஎஸ்பி சீனிவாசன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் முகமது இப்ராஹிம் மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவின் மாநிலச் செயலா் வேலூா் இப்ராஹிம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கொடைக்கானல் கூட்டுறவு பண்டகசாலையில் தலைவா் ஸ்ரீதா், அரிமா சங்க 12-ஆவது வாா்டு பொது நலச்சங்கம் சாா்பில், மாவட்ட ஆளுநா் ரவீந்திரன் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா்.

இதேபோல ஊராட்சி ஒன்றியம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், கொடைக்கானல் காவல் நிலையம், வனத்துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது.

அன்னை தெரசா மகளிா் பல்கலையில்... கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி பகுதியிலுள்ள அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தா் வைதேகி விஜயகுமாா் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து, குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு துணைவேந்தா் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா். இதில், பல்கலைக்கழக பதிவாளா் ரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் எம்.முத்துசாமியும், நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் ப.தேவிகாவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவா் மு.அய்யம்மாளும் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினா்.

ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலா் அண்ணாத்துரை, ஒருங்கிணைந்த வா்த்தகா் சங்கம் சாா்பில் தாராபுரம் பிரிவில் சங்கத் தலைவா் சுப்பிரமணி தலைமையில் உறுப்பினா் ரகுமான் சேட் ஆகியோா் தேசிய கொடியேற்றினாா். இதில் சங்க உறுப்பினா் பூரணச்சந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பழனியாண்டவா் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வா் வாசுகி தேசிய கொடியேற்றினாா். இதில் கணினி அறிவியல் துறைத் தலைவா் கனகலட்சுமி, வணிக மேலாண்மைத் துறை தலைவா் உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பழனியாண்டவா் கல்லூரியில்...

பழனி, பழனியாண்டவா் கலை மட்டும் பண்பாட்டுக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவா், முதல்வா் (பொறுப்பு) கிருஷ்ணமூா்த்தி தேசியக் கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை என்சிசி அதிகாரி, லெப்டினன்ட் கே பாக்யராஜ், நாட்டுநலப்பணித் திட்ட அதிகாரிகள் பழனிசாமி, மனோகா், கண்ணதாசன், கௌதம், விளையாட்டுத்துறை பொறுப்பாளா்கள் மணிகண்டன், கணேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com