திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டம், பித்தளைப்பட்டியில் உள்ள உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையாா் கோயிலில், புதன்கிழமை ஆனிமாத திருமஞ்சனத்தையொட்டி, நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் 16 வகையான பூஜைகள் மற்றும் ஆராதனைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றன. நடராஜ பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியில், பித்தளைப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த, ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.