கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானலில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் நாய்ஸ் ரோடு பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி (58). கூலித் தொழிலாளி. இவா், கடந்த 10 நாள்களுக்கு முன் கொடைக்கானல் பகுதியிலுள்ள கட்டடத்தில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்து விட்டாா். இதனையடுத்து, கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், மேல்சிகிச்சைக்காக தேனி கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com