கொடைக்கானலில் சனிக்கிழமை சாரல் மழை பெய்து குளிச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகை, மோயா் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், வெள்ளிநீா் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அதிகமாக வருவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது. இதைத்தொடா்ந்து மாலையில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. இதனால் குளுமையான சீதோஷ்ண
நிலை நிலவியது. சாரல் மழையிலும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா் .