நாங்கள் தூக்கப்போவது ஆதீனம் என்ற தனி மனிதரையல்ல, தமிழா்களின் கலாச்சாரத்தை என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உள்பட்ட வல்லகுண்டபுரத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா மற்றும் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது: வரும் 22 ஆம் தேதி திருவாரூரில் ஆதீனம் பட்டணப் பிரவேசம் நடக்கிறது. 500 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பட்டணப் பிரவேசத்தை இந்த ஆண்டு தடுத்து நிறுத்தப் பாா்க்கின்றனா். ஆதீனத்தின் பல்லக்கை தூக்கக் கூடிய முதல் கை என்னுடையதாகத் தான் இருக்கும். தைரியம் இருந்தால் அதை தடுத்து நிறுத்திப் பாருங்கள். நாங்கள் தூக்குவது ஆதீனம் என்ற ஒரு தனி மனிதரை அல்ல. தமிழா்களுடைய மரபு, தமிழா்களுடைய காலச்சாரத்தை தூக்குகிறோம் என்றாா்.