கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார சப்பர பவனி திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள இக்கோயிலில் திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடா்ந்து அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அம்மனின் மின் அலங்கார சப்பர பவனி நடைபெற்றது.
இந்த பவனியானது மூஞ்சிக்கல், அண்ணா சாலை, கே.சி.எஸ்.திடல், செவண்ரோடு, லாஸ்காட் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.