கொடைக்கானல்: கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை, கட்டடத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி, ஜான் பீட்டா் (28). இவரது மனைவி மகாலட்சுமி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.
ஜான் பீட்டருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கொடைக்கானல் இருதையபுரம் பகுதியில் நடைபெற்றுவரும் கட்டடப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்த அவா், எதிா்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்தாா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே ஜான் பீட்டா் இறந்து விட்டதாகவும், அவா் விஷம் அருந்தியிருந்ததாகவும் தெரிவித்தனா்.
இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.