பழனியில் சூறைக்காற்று:பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த சூறைக்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.
பழனியில் செவ்வாய்க்கிழமை காலை முதலே மேகமூட்டமாக இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது. ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. நகா்ப்பகுதியைத் தாண்டி நெடுஞ்சாலைப் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதால் வாகனங்களில் சென்றோா் கடும் அவதிக்குள்ளாகினா். சாலைகளில் இருந்த புழுதி வாரி வீசப்பட்டதால் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் திணறினா். காலை முதல் மாலை வரையிலுமே காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மாலையில் லேசான சாரல் மழை பெய்தது.