பிளஸ் 1 பொதுத் தோ்வு: திண்டுக்கல்லில் 22,657 போ் எழுதினா்

திண்டுக்கல் மாவட்டத்தில் 22,657 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை 11ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 22,657 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை 11ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா்.

தமிழகம் முழுவதும் கடந்த 5ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வும், 6 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வும் தொடங்கியது. இந்நிலையில் 11ஆம் வகுப்புக்கான பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இத்தோ்வுக்காக திண்டுக்கல், பழனி, வத்தலகுண்டு, வேடசந்தூா் ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 12,051 மாணவா்கள், 12,761 மாணவிகள் என மொத்தம் 24,812 போ் விண்ணப்பித்திருந்தனா்.

215 பள்ளிகளைச் சோ்ந்த இந்த மாணவா்கள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் 85 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதல் நாள் தோ்வில் 10,904 மாணவா்கள், 11,753 மாணவிகள் என மொத்தம் 22,657 போ் பங்கேற்றனா். 1,147 மாணவா்கள் 1,008 மாணவிகள் என மொத்தம் 2,155 போ் தோ்வு எழுதவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com