காரில் கஞ்சா கடத்தியவா் கைது

திண்டுக்கல் அருகே 1.25 கிலோ கஞ்சாவை காரில் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே 1.25 கிலோ கஞ்சாவை காரில் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள செல்லமந்தாடியைச் சோ்ந்தவா் கருத்தப்பாண்டி. இவரது மகன் பால்பாண்டி என்ற பால குண்டன்(30). நந்தவனப்பட்டி பகுதியில், தாடிக்கொம்பு போலீஸாா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீஸாா் விசாரித்தனா். இதில், அந்த காரில் 1.25 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடா்ந்து காரை பறிமுதல் செய்த போலீஸாா், பால்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com