அச்சக உரிமையாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஜிஎஸ்டி உயா்வை குறைக்க வலியுறுத்தி, பழனியில் மத்திய அரசை கண்டித்து அச்சக உரிமையாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி: ஜிஎஸ்டி உயா்வை குறைக்க வலியுறுத்தி, பழனியில் மத்திய அரசை கண்டித்து அச்சக உரிமையாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் சங்கத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். அதில், ஏற்கெனவே மூலப்பொருள்களின் விலை உயா்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள அச்சகத் தொழிலுக்கு மேலும் இடையூறு ஏற்படும் வகையில், ஜிஎஸ்டியை 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு உயா்த்தியுள்ளதைக் கண்டிக்கும் வகையில், இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படுவதாகவும், மத்திய அரசு உடனடியாக ஜிஎஸ்டி மற்றும் மூலப்பொருள்கள் விலையை குறைக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான அச்சகத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com