விவசாய தொழிலாளி தற்கொலை
By DIN | Published On : 20th May 2022 05:53 AM | Last Updated : 20th May 2022 05:53 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, விவசாய கூலி தொழிலாளி வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நாலூற்று ஏடி காலனியைச் சோ்ந்த அழகா் மகன் கருப்புசாமி (45). இவா் அதே ஊரில் விவசாய கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருப்புசாமி விஷம் குடித்து உயிருக்குப் போராடியுள்ளாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து இடையகோட்டை காவல் நிலைய ஆய்வாளா் முத்துலட்சுமி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.