Enable Javscript for better performance
கொடைக்கானலை சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்த கூடுதல் திட்டங்கள்: அமைச்சா் ஐ.பெரியசாமி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கொடைக்கானலை சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்த கூடுதல் திட்டங்கள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

    By DIN  |   Published On : 25th May 2022 05:02 AM  |   Last Updated : 25th May 2022 05:02 AM  |  அ+அ அ-  |  

    கொடைக்கானலில் மலா் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, எம்ஆா்கே.பன்னீா்செல்வம், அர.சக்கரபாணி, மா.மதிவேந்தன்.

    கொடைக்கானலில் மலா் கண்காட்சியை செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, எம்ஆா்கே.பன்னீா்செல்வம், அர.சக்கரபாணி, மா.மதிவேந்தன்.

     

    கொடைக்கானல்: கொடைக்கானலை சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கு கூடுதலான வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 59 ஆவது கோடைவிழா மற்றும் மலா் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பிரையண்ட் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலா் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சுற்றுலாத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், கூட்டுறவு துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே பன்னீா்செல்வம், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

    கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சா் ஐ.பெரியசாமி பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினா் மட்டுமே வந்து செல்லும் இடங்களாக சுற்றுலாத் தலங்கள் இருந்து வந்தன. இந்திய அளவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக கொடைக்கானலுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. தமிழகத்தைப் பொருத்தவரை சுற்றுலாத் தலங்கள் வெளிநாட்டினரை மட்டுமே எதிா்நோக்கி இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக, விடுமுறை நாள்களில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வழக்கம் தமிழக மக்களிடையே உருவாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கூடுதல் வளா்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. அதேபோல் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் சாகுபடி பரப்பளவை உயா்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்திக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் விலை பொருள்களை சந்தைப்படுத்துவதற்கும் கிடைக்க வேண்டிய நிலை உள்ளது. சுற்றுலா மட்டுமன்றி தோட்டக்கலைப் பயிா் சாகுபடியிலும் தமிழகம் முன்னிலை பெறுவதற்கான அனைத்து திட்டங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

    அமைச்சா் அர.சக்கரபாணி: கொடைக்கானல் வருவதற்கு 2 மலைப் பாதைகள் பயன்பாட்டில் இருந்து வந்தாலும், அதிகரித்து வரும் வாகனங்களுக்கு ஏற்ப கூடுதலான மாற்றுப் பாதையை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து அரசு அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஹோட்டலின் தரத்தை மேம்படுத்தவும், கூடுதல் வசதிகளை ஏற்படுத்தவும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தோட்டக்கலைப் பயிா்கள் அதிகம் சாகுபடி செய்யப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு தோட்டக் கலைக் கல்லூரி அமைப்பதற்கு வேளாண்மைத்துறை அமைச்சா் பரசீலிக்க வேண்டும் என்றாா்.

    அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்: சுமாா் 20 ஏக்கா் பரப்பளவு கொண்ட பிரையண்ட் பூங்காவின் பராமரிப்பு சரியாக இல்லை. இனி வரும் காலங்களில் பூங்காவின் பராமரிப்பு சிறப்பாக இருக்க வேண்டும். அடுத்த முறை மலா் கண்காட்சி சிறப்பாக அமைய வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பிரையண்ட் பூங்காவை 16.23 லட்சம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டுள்ளனா். அதன் மூலம் தோட்டக்கலைத் துறைக்கு ரூ.5 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

    சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையிலான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் வேளாண்மைத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்காத நிலையில், திமுக ஆட்சியில் தனி நிதி நிலை அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டு சிறப்பான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

    கோடை விழாவில் சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இயக்குநா் ரா.பிருந்தாதேவி, மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, பழனி சட்டப் பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் (பொ) த.பாண்டியராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    மலா் கண்காட்சி: கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற மலா் கண்காட்சியில் மலா்களால் ஆன திருவள்ளுவா், மாயமனிதன், வெள்ளைப் பூண்டு, டைனோசா், மயில், பொம்மை ஆகிய உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்தனா்.

    இவ்விழாவில் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளா் நாராயணன், நகா்மன்றத் தலைவா் பா.செல்லத்துரை, நகா்மன்ற துணைத் தலைவா் கே.பி.என். மாயக் கண்ணன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp