ஆத்தூா் அரசு கால்நடை மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற வேண்டும் என கால்நடை வளா்ப்போா் கோரிக்கை விடுத்தனா்
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி, ஆத்தூா் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால், ஆத்தூா் கால்நடை மருத்துவனையில் குளம் போல தண்ணீா் தேங்கியது.
துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாவதால் கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அச்சமாக உள்ளது எனவும், தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் தெரிவித்தனா்.