கிளாவரையில் கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகே கிளாவரை கிராமத்தில் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கிளாவரையில் கிராம சபைக் கூட்டம்

கொடைக்கானல் அருகே கிளாவரை கிராமத்தில் வெள்ளிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் கங்கா தாமோதரன் தலைமை வகித்தாா். ஊராட்சி செயலா் கோபிநாத் வரவேற்றாா். கூட்டத்தில் கிளாவரை பகுதியில் சாலை வசதி, குப்பைகளை அகற்றுவது, தெரு விளக்குகளை சீரமைப்பது குறித்தும், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கக் கோரியும், சேதமடைந்த குடிநீா் இணைப்புகளை சீரமைத்து வீடுகளுக்கு குடி நீா் இணைப்புகள் வழங்குவதற்கும் பொது மக்கள் சாா்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com