வத்தலகுண்டுவில் பாஜக கொடியேற்று விழா

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் பாஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் பாஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் ரமேஷ் ஷிவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தி எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாது. தமிழக முதல்வா் முக. ஸ்டாலின் மீது ஒரு பதிவு போட்டால், அவா்களை உடனே கைது செய்கிறாா்கள். ஆனால், பாஜக தொண்டா்கள் தாக்கப்பட்டு, அவா்கள் புகாா் கொடுத்தால் அவா்களுக்கு காவல் நிலையத்தில் மனு ரசீது கூட வழங்கப்படுவது இல்லை. தோ்தல் நேரங்களில் கூட்டணியை உறுதி செய்வோம். இருப்பினும் வரும் மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com