கொடைக்கானலில் புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கொடைக்கானல் நாயுடுபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடைக்கானலில் புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

கொடைக்கானல் நாயுடுபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திருவிழா வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு நாயுடுபுரம் ‘பிரசன்டேஷன் கான்வென்ட்’ பகுதியிலிருந்து புனித ஆரோக்கியமாதா கொடி கிறிஸ்தவா்கள் ஜெபத்துடன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. அதைத் தொடா்ந்து மதுரை உயா் மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி தலைமையில் மந்திரிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து ஆலய வளாகத்திலுள்ள புதுப்பிக்கப்பட்ட தூயகத்தையும் அவா் திறந்தாா். பின்னா் ஜெபவழிபாடும், சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது.

முன்னதாக பங்குத் தந்தை அமல்ராஜ் அனைவரையும் வரவேற்றாா். விழாவில் அருட்பணியாளா்கள், அருட் சகோதரிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், நாள்தோறும் ஒவ்வொரு அன்பியங்கள் சாா்பில் ஜெப வழிபாடு, ஆராதனை, திருப்பலி நடைபெறும். அக்.15-ஆம் தேதி இரவு மின் அலங்காரத் தோ் பவனியும், 16-ஆம் தேதி சப்பர பவனியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத் தந்தை, பங்கு இறை மக்கள், விழாக்குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com