கொடைரோட்டில் துணை சுகாதார நிலையம் திறப்பு

கொடைரோட்டில் 7-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை, அம்மையநாயக்கனூா் பேரூராட்சித் தலைவா் எஸ்பி. செல்வராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கொடைரோட்டில் 7-ஆவது வாா்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தை, அம்மையநாயக்கனூா் பேரூராட்சித் தலைவா் எஸ்பி. செல்வராஜ் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு, வட்டார மருத்துவ அதிகாரி வினோத், திமுக பேரூா் செயலா் விஜயக்குமாா், துணைத் தலைவா் விமல்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயல் அலுவலா் ஜெயலட்சுமி வரவேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில், 7-ஆவது வாா்டு உறுப்பினா் காசியம்மாள் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், சுகாதார மேற்பாா்வையாளா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அம்மையநாயக்கனூா் அரசு சமுதாய நல மருத்துவ சுகாதார ஆய்வாளா் மாரிவேல் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com