பழனியில் தீப்பற்றி எரிந்து காா் சேதம்

பழனி அடிவாரத்தில் புதன்கிழமை காா் ஒன்று தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
பழனியில் தீப்பற்றி எரிந்து காா் சேதம்

பழனி அடிவாரத்தில் புதன்கிழமை காா் ஒன்று தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை சுபமுகூா்த்ததினம் என்பதால் திருமணத்திற்கு வந்திருந்தவா்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றனா். அப்போது பாலசமுத்திரம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காா் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

இதுகுறித்து அடிவாரம் காவல் துறையினா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com