மாா்க்கம்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் அடுத்துள்ள வி.எஸ்.கோட்டை மாா்க்கம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன், ஸ்ரீகன்னிமாா், ஸ்ரீகருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் அடுத்துள்ள வி.எஸ்.கோட்டை மாா்க்கம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீவிநாயகா், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன், ஸ்ரீகன்னிமாா், ஸ்ரீகருப்பணசாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை மாலை முதற்கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டன. செவ்வாய்க்கிழமை 2 மற்றும் 3ஆம் கால யாக பூஜைகள், ஸ்ரீருத்ர ஜெபம், வேத பாராயணம் நடைபெற்றது. இந்நிலையில் சிவாச்சாரியாா் வழிபாட்டுடன், 4ஆம் கால யாக பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. பின்னா் யாக சாலையிலிருந்து மேள தாளம் முழங்க ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட புனிதநீா் கலச குடங்கள், கோபுர ஊச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஸ்ரீவிநாயகா் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீபகவதியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. விழாவில் வி.எஸ்.கோட்டை சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com